இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் செல்போன் மூலமாக பல்வேறு அதிர்ச்சிகரமான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. பெங்களூரில் காதலி அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த சஞ்சய் என்ற 24 வயது இளைஞர் பெங்களூரில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். சமீபத்தில் சஞ்சய் தனது காதலியின் அந்தரங்க புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

அதன் பிறகு அவர்களுக்கு வரும் கமெண்ட்டுகளை படித்து மகிழ்ந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.