மத்திய அரசானது நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி என்று தாக்கல் செய்தபோது பெண்களுக்காக 7.5% வட்டி அளிக்கும் மகிளா சம்மன் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் பெண்கள் மட்டுமே சேர்ந்து கொள்ள முடியும். இரண்டு வருடம் முதிர்வு காலம் கொண்ட இந்த திட்டத்தின் மூலமாக நல்ல லாபத்தை அடையலாம். முன்னதாக பொதுத்துறை வங்கிகளில் மட்டுமே இந்த திட்டத்தில் கணக்கை தொடங்க முடியும்.

ஆனால் இனி அதைத் தவிர ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிபிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐ சிஐ வங்கி ஆகிய நான்கு தனியார் வங்கிகளிலும் பெண்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இதன் மூலம் வெறும் வருமானம் வருடத்திற்கு 40 ஆயிரத்தை தாண்டும் பொழுது மட்டுமே வருமான வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.