திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைமை பார்த்துக்கொள்ளும். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றியதால் இனி எந்தக் காலத்திலும் பெண்களின் ஓட்டு திமுகவுக்கு மட்டும்தான் என முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். புதிய வாக்காளர்களையும், இளைஞர்களின் வாக்குகளையும் ஈர்க்கும் எஃகு கோட்டையாக திமுக திகழ்ந்து வருகிறது எனவும் பெருமிதம் தெரிவித்தார்.