திருச்சி மாவட்டத்தில் உள்ள சீரங்கம்பட்டியில் பழனிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹன்சிகா(12) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பழனிமுத்து தனது வீட்டிற்கு பின்புறம் பூச்செடிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஹன்சிகா பூப்பறிக்க சென்றபோது பூச்செடியில் பதுங்கி இருந்த பாம்பு அவரை கடித்தது.

இதனால் மயங்கி விழுந்த ஹன்சிகாவை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஹன்சிகா திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஹன்சிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.