புஸ்ஸி ஆனந்தின் சவகாசம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு நல்லதல்ல என எஸ்.ஏ.சந்திரசேகர் எச்சரித்துள்ளார். புஸ்ஸி ஆனந்தின் நாடகத்தை அறியாத விஜய், அவருக்கு பக்கபலமாக செயல்படுவதாக குறிப்பிட்ட SAC, இப்படிப்பட்டவருடன் விஜய் இருந்தால் நாளை அவரது எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் ஒரு தந்தையாக தனக்கு இருக்கிறது என வேதனை தெரிவித்தார். SAC-யின் இந்தக் கருத்து தவெக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.