தெலுங்குத் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றுதான் மைத்ரி மூவி மேக்கர்ஸ். அந்த நிறுவனம் இப்போது “புஷ்பா 2” படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் அந்நிறுவனத்திலும், புஷ்பா’ பட இயக்குனர் சுகுமார் இல்லத்திலும் கடந்த வாரம் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை போன்றவை சோதனை நடத்தியது.

கடந்த 5 நாட்களாக நடந்து வந்த இந்த சோதனை நேற்று முன்தினம் முடிவடைந்துள்ளது. இவற்றில் பெரிய அளவில் எதுவும் சிக்கவில்லை. சில சிறிய தவறுகள் நடந்துள்ளது. அவற்றை விரைவில் சரிசெய்வதற்கு கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. சோதனையால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த “புஷ்பா 2” சூட்டிங் மீண்டும் ஆரம்பமாகி இருக்கிறது எனவும் கூறுகிறார்கள்.