கர்நாடகாவில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் வழங்கும் ‘சக்தி’ திட்டம் ஒருபுறம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், மறுபுறம் அதில் நடக்கும் முறைகேடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் புர்கா அணிந்த பெண் ஒருவர், இந்துப் பெயர் கொண்ட ஆதார் கார்டை வைத்துப் பயணம் செய்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பேருந்துகளில் இருக்கும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் போலி அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு இந்தத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
அடையாள அட்டையில் இருக்கும் மத அடையாளத்திற்கும் அந்தப் பெண்ணின் தோற்றத்திற்கும் இடையே இருக்கும் முரண்பாடு தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவத்தைப் பார்த்த நெட்டிசன்கள், “இது போன்ற ஏமாற்று வேலைகளுக்கு அபராதம் கிடையாதா?” என்றும், “முறையான சோதனைகள் இல்லாமல் இலவசம் வழங்குவது எப்படிச் சரியாகும்?” என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் அந்த வீடியோ சமூக வலைதளங்களுக்காகத் திட்டமிட்டு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
Woman Travels on Karnataka government Bus With Aadhaar Card Bearing Hindu Name, Identity Discrepancy Raises Questions
A woman traveling on a Karnataka government bus appeared to belong to the Muslim community but was holding an Aadhaar card with a Hindu name.This raised… pic.twitter.com/RtuXk6SIKm
— Karnataka Portfolio (@karnatakaportf) February 1, 2026
எது எப்படியோ, தகுதியுள்ள பெண்களுக்குச் சென்றடைய வேண்டிய இந்தத் திட்டம், இது போன்ற குளறுபடிகளால் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இது போன்ற முறைகேடுகளைத் தடுக்கவும், தகுதியானவர்களைச் சரியாகக் கண்டறியவும் கர்நாடக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.
