புரட்டாசி மாதத்தை முன்னிட்டு புகழ்பெற்ற வைணவ திருத்தலங்களுக்கு பக்தர்களை ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். புரட்டாசி மாதத்தில் சென்னை திருச்சி மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவ திருக்கோவில்களுக்கு குறைந்த கட்டணத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்லும் விதமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகிறது.

எனவே இந்த ஆன்மீக சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய 044 -2533 3333, 2533 3444 என்ற தொலைபேசி எண்ணிலும் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800 4253 1111 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.