இன்று டிசம்பர் 3 மற்றும் நாளை டிசம்பர் 4 நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற இருந்த தொலைதூர கல்வி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வும் டிசம்பர் நான்காம் தேதி நடைபெற இருந்த இளநிலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.