‘ஜெய் பீம்’ திரைப்படம் புத்தகமாக வெளியாக உள்ளதாகவும் 2023 சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் கிடைக்கும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2021ம் ஆண்டு வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் திரைக்கதையை நூலாக அருஞ்சொல் ஆசிரியர் சமஸ் தயார் செய்துள்ளார். 2023 சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் கிடைக்கும் என தெரிகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ”ஜெய் பீம்” .  ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம். இதில் பிரகாஷ்ராஜ், ராவ்ரமேஷ், ராஜிஷாவிஜயன், மணிகண்டன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை 2d நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.