ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு பிரபல தணிக்கை நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தான் குழந்தை பெற்றுக்கொண்ட அந்தப் பெண்ணை, அவரது மேலதிகாரி தினமும் 16 மணிநேரம் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும் மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பிய அந்தப் பெண்ணின் உடல்நிலையைக் கூடக் கருத்தில் கொள்ளாமல், நள்ளிரவு வரை வேலை வாங்கப்பட்டதால் அவர் கடும் மன உளைச்சலுக்கும் உடல் நலக்குறைவுக்கும் ஆளாகியுள்ளார். “தனது மனைவியின் வாழ்க்கையை அந்த மேலதிகாரி நரகமாக்கிவிட்டார்” என அவரது கணவர் சமூக வலைத்தளங்களில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
“>
இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் மிக மோசமான பணிச்சூழலை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, குடும்பப் பொறுப்புகளையும் குழந்தையையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பெண்களுக்கு இத்தகைய அதிகப்படியான வேலைப்பளு மிகப்பெரிய சவாலாக மாறுகிறது.
இந்த சக ஊழியர்களிடம் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டிய மேலதிகாரிகளே, ஊழியர்களைத் தங்களின் அடிமைகளைப் போல நடத்துவது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி, பணி இட பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் நலம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளன.
