புதிதாக 16 லட்சம் வாக்காளர் அடையாள அட்டைகள் பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் பழைய அட்டையை வைத்திருப்பவர்கள் புகைப்படம் உள்ளிட்டவற்றை மாற்றி புதிய அட்டையை பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய வாக்காளர் அட்டையில் க்யூ ஆர் கோடு வசதியுடன் மிகச் சிறிய எழுத்து இடம் பெறும் விதமாக பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய புதிய வடிவிலான வாக்காளர் அடையாள அட்டை வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் அட்டைக்கு இதுவரை வெளியே ஒட்டப்பட்ட ஹோலோகிராம் இனி அட்டைக்குள்ளேயே ஒட்டப்படும். அடையாள அட்டை முன்புறம் வாக்காளரின் புகைப்படம் மற்றும் நெகட்டிவ் இமேஜ் போன்ற படமும் இடம்பெறும் எனவும் போலி அட்டைகள் உருவாக்க முடியாத விதமாக பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த புதிய வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.