மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் புதிய வங்கிக்கணக்கு தொடங்கியுள்ள மகளிருக்கு ஏடிஎம் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தை தொடங்கி வைத்ததும், அந்த மாதத்துக்கான உரிமைத் தொகை தகுதியான அனைவரின் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படும்.

அக்டோபர் முதல் மாதம்தோறும் 1ஆம் தேதி உரிமைத் தொகை வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில், 11ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.