இந்தியாவில் பிரபல தொழில் நிறுவனமான டாடா, இந்திய அரசின் விமான சேவை நிறுவமான ஏர் இந்தியாவை வாங்கியது. தொடர்ந்து வளர்ச்சியின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவில் டாடா குழுமம் புதிய மாற்றங்களை கொண்டுவந்தது. சமீபத்தில் விமானத்தின் லோகோ, டிசைன்களை மாற்றி இருந்தது. இந்நிலையில், புதிய சீருடைகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இதன்படி, விமானப்பணி பெண்களுக்கு ஓம்ப்ரே புடவையும், ஆண்களுக்கு பந்தகாலாவும், விமானிகளுக்கு கிளாசிக் கருப்பு சூட் டிசைன் அறிமுகப்படுத்தி உள்ளது. இவை அனைத்தையும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா டிசைன் செய்துள்ளார்.