தெலுங்கானாவில் வருகின்ற நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நவம்பர் மாதத்தில் மட்டும் பீர் விற்பனை இரு மடங்கு உயர்ந்துள்ளது. நவம்பர் 1 முதல் 22 வரை 22 லட்சம் பெட்டிகள் பீர் விற்பனையாகியுள்ளது.

இதன் மதிப்பு 1470 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 12 லட்சம் பெட்டிகள் பீர் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தேர்தல் நேரம் என்பதால் பீர் விற்பனை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் மதுபான விற்பனையும் கணிசமாக உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது