தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இந்த தேர்வில் 92.37% மாணவர்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகள் துணை தேர்வுக்கு மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன்படி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் சென்று விண்ணப்பிக்கலாம் என்றும், தனித்தேர்வர்கள் மாவட்ட சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் எனவும் தேர்வு துறை அறிவித்துள்ளது.