மிருதங்க வாசிப்பில் காரைக்குடி பாணி என்கிற வழிமுறையை ஏற்படுத்திய மிருதங்க வித்வான் குரு காரைக்குடி மணி(77) நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மிகுந்த ஆன்மீக நாட்டமுடைய இவர் சுவாமி ஸ்ரஜானந்தாவை தன்னுடைய குருவாக ஏற்றார். பாரம்பரிய வாசிப்பு முறைகளை தீவிரமாக பின்பற்றினார். இருப்பினும் இசையில் புதிய சோதனைகளை செய்து பார்க்க இவர் தயங்கியது கிடையாது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உட்பட பல பகுதிகளிலும் இவருக்கு ஏராளமான சீடர்கள் இருக்கிறார்கள். பல பரதநாட்டிய படைப்புகளுக்கு இவர் லயக் கோர்வைகள் அமைத்துள்ளார். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.