பஞ்சாபி நாட்டுப்புற பாடகர் ரஞ்சித் சித்து   வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்ரூர் மாவட்டம் சுனம் நகரில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் இறுதிச் சடங்கிற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் கொடுத்த மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இவருடைய மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.