உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசி மாவட்டம் ஷிவ்பூர் பகுதியில் பிரபல நாட்டுப்புறப் பாடகி அஞ்சல் ராகவாணி (22) சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இந்த தகவலை போலீசார் நேற்று வெளியிட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ள பாடகியின் சகோதரர் விகாஸ், அவரது கணவர் தனது சகோதரியை கொன்றதாக குற்றம் சாட்டினார். அஞ்சலின் கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.