சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி கல்லூரி வளாகத்தில் மோதிக்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தபோது இருதரப்பு மாணவர்கள் இடையே மீண்டும் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மர்மகும்பல் திடீரென்று கல்லூரி வளாகத்திற்குள் இரண்டு நாட்டு வெடிகுண்டை வீசி தப்பி சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.