மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் ஜோஷி. இவர் இயக்கத்தில் கடந்த வருடம் ஆண்டனி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவருடைய வீட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கொள்ளை நடந்துள்ளது. அதாவது ஜோஷி தன்னுடைய குடும்பத்தினருடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது கிச்சன் ஜன்னலை  உடைத்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் வீட்டில் இருந்த ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர  நகைகளை கொள்ளை அடித்து விட்டு சென்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் திருட்டில் ஈடுபட்டவர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருப்பது தெரியவந்த நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..