பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் “ஆயுஷ்மான் மேளா” நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பட்டு செய்துள்ளது. செப். 13ம் தேதி ஆயுஷ்மான் பாவா பிரசாரத்தின் கீழ் திட்டங்களை குடியரசுத் தலைவர் முர்மு தொடங்கி வைக்கிறார். செப்.17ம் தேதி முதல் அக்.2ம் தேதி வரை நாடு முழுவதும் 1,17,000க்கும் மேற்பட்ட சுகாதார மையங்களில் ஆயுஷ்மான் மேளா நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.