பிரதமரின் தமிழகம் வருகை தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்

சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் தமிழகம் வருவது உறுதி, தேதி மட்டும் மாற வாய்ப்பு உள்ளது. அரசு நிகழ்ச்சிகள் சிலவற்றிலும் பிரதமர் கலந்து கொள்ள இருப்பதால் தமிழகம் வருகை தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மூன்று நாட்களில் பிரதமர் தமிழகம் வருகை தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் பாஜக யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நிச்சயம் கலந்து கொள்வார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கத்திற்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் குறித்து பாஜகவை குறை கூறினால் என்ன செய்வது?என்று கூறினார்.