மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமையகத்தில் நடைபெற உள்ளது.

இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை குறித்து ஆலோசிகப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேமுதிக பாஜக கூட்டணியில் இணையுமா அல்லது அதிமுகவுடன் இணையுமா என்றும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.