ஒவ்வொரு வருடமும் வள்ளலாரின் ஜோதி தரிசன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் வடலூரில் நிறுவப்பட்டு உள்ள சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த வருடம் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி வள்ளலார் ஜோதி தினம் நடைபெற உள்ளதால் இதனை காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதனால் பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி மது விற்பனை செய்ய தடை செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனை மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.