தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தற்போது பிரசாந்த் நீல் இயக்கிய சலார் திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் நடிகை ஸ்ருதிஹாசனை ரசிகர் ஒருவர் பின் தொடர்ந்ததால் அவர் எரிச்சல் அடையும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ள நிலையில் அதில், நான் ஏர்போர்ட்டில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு மனிதர் என்னை பின்தொடர்ந்தார். அது ஒரு புகைப்படத்திற்காக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர் யார் என்று எனக்குத் தெரியாது. நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன் என்று ஸ்ருதிஹாசன் பதிவிட்டுள்ளார்.