பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா செப்டம்பர் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எப்போதும் கலகலப்பாக இருக்கும் விஜய் ஆண்டனி, இந்த சம்பவத்தால் உடைந்து போனார். இதனை அடுத்து செவ்வாய்க்கிழமை மதியம் மீராவின் இறுதி சடங்குகள் முடிக்கப்பட்டது.

மக்களின் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற விஜய் ஆண்டனி, அதன்பின் வெளியே வரவே இல்லை என்று சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. திரைப் பிரபலங்கள் அவருக்கு ஆறுதல் சொல்ல வீட்டிற்குசென்றால் கூட அவரை பார்ப்பது சிரமமாக இருக்கிறது என்று கூறினர்.