விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் தொடரின் கடைசி எபிசோட் நாளை ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் டைட்டிலை யார் கைப்பற்றியுள்ளார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிக் பாஸ் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் இருந்து கிடைத்த நம்பகமான தகவலின்படி அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக மாயா மற்றும் அர்ச்சனா ஆகியோரிடையே கடும் போட்டி நிலவிவந்த நிலையில் அர்ச்சனா டைட்டில் தட்டிச்சென்றுள்ளதாக தெரிகிறது. நாளை வெளியாகும் கடைசி எபிசோடில் இது குறித்த தகவல் வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.