சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிலையில் என்னுடைய சீரியல்கள் மூலம்தான் எனக்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது என ரட்சிதா ஓப்பனாக கூறியுள்ளார்.

எக்ஸ்ட்ரீம் பட பூஜையின் போது பேசிய அவர், பிக்பாஸ்க்கு போனாலே வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் உண்மை இல்லை. நம் திறமையை பார்த்து மக்கள் அங்கீகாரம் கொடுப்பார்கள். அதைப் பார்த்து இயக்குனர்கள் வாய்ப்பு வழங்குவார்கள். நாம்தான் நமக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.