தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு மாவோயிஸ்டுகள் மத தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுத்துறை கூறியுள்ளது. இந்நிலையில் அண்ணாமலைக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுக்குத்துறை கூறியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தற்போது ‘ஓய்’ பிரிவில் உள்ள அண்ணாமலையின் பாதுகாப்பு ‘இஸட்’ பிரிவுக்கு மாற்றப்படுகிறது. மேலும் 33 சி.பி.ஆர்.எப் கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என கூறப்பட்டுள்ளது.