அமெரிக்கா நியூயார்க் மாகாணத்தில் பிறந்து பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஜியாகான். 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் மும்பையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். நடிகரும் காதலருமான சூரஜ் பஞ்சோலி தான் தனது இறப்புக்கு காரணம் எனக்கூறி ஜியாகான் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். தற்கொலைக்கு தூண்டிய சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டார்.

2014 முதல் வழக்கை சிபிஐ விசாரணை செய்தது. 10 வருடங்களாக நடந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை அண்மையில் நிறைவடைந்தது. சூரஜுக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் இந்த வழக்கில் இருந்து விடுவித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.