விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி வாயிலாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். அந்த நிகழ்ச்சி வாயிலாக அவருக்கு கிடைத்த பிரபலம் அப்படியே சினிமா பக்கம் வரவும் உதவியாக இருந்தது. படங்களில் நடிக்க ஆரம்பித்த ரோபோ ஷங்கர் சென்ற சில மாதங்களாக எந்த படமும் நடிக்காமல் உள்ளார். ஏனெனில் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உடல் எடை அப்படியே குறைந்து ஆளே மாறி விட்டார்.

இப்போது நீண்ட மாதங்களுக்கு பின் நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் ரோபோ ஷங்கரின் மனைவியான பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன்படி, அவரது தாயார் இறந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். அவரது நினைவுநாளை முன்னிட்டு அம்மாவின் புகைப்படத்துடன் வருத்தமான பதிவு போட்டு உள்ளார்.