சென்னை திருவான்மியூரில் கலாசேத்ரா அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீ ஜத் மீது இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி பாலியல் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின்படி வெளிநாட்டில் வசித்து வரும் அந்த மாணவியிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக அடையாறு மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் மூலம் நேற்று ஸ்ரீஜத் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது தனியாக நடன பள்ளி அமைந்து மாணவிகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்து வருகிறார். மேலும் கலாஷேத்ரா கல்லூரியின் உதவி நடன பேராசிரியர் ஹதிபத்மன் கடந்த வருடம் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.