லிஃப்டில் சிக்கிக்கொண்ட குழந்தைகளை மிகத் தைரியமாக மீட்ட ஒரு சிறுமியின் வீடியோ தற்போது இணையதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. பொதுவாகக் குழந்தைகள் ஒன்றாக விளையாடும்போது மூத்த குழந்தைகளிடம் இளையவர்களின் பொறுப்பை ஒப்படைப்பது வழக்கம். அந்தப் பொறுப்பை மிகச் சரியாக உணர்ந்த இந்தச் சிறுமி, ஆபத்தான நேரத்தில் பதற்றமடையாமல் 2 குழந்தைகளை மீட்டெடுத்த விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
This BRAVE Girl Saved Two Little Girls From Getting Stuck in the Elevator 👏👏❤️🫡 pic.twitter.com/95VfQjY0PK
— Rosy (@rose_k01) February 20, 2026
கேரளா கௌமுதி வெளியிட்டுள்ள இந்தச் செய்தியின்படி, அந்தச் சிறுமி லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறால் நின்றபோது, பயந்து அலறிய குழந்தைகளைத் தேற்றி, அவர்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளார். “மரண பயத்திலும் இந்தச் சிறுமி காட்டிய பக்குவம் பெரியவர்களுக்கே வராது” எனச் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆபத்துக் காலங்களில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
