பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்கள் அடித்து வெற்றி பாதையை பிரகாசமாக்கினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி ஆகி உள்ளது.

இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் ஒரு டிரா என மொத்தம் 7 புள்ளிகளை பெற்றுள்ளது இந்திய ஆணி. அதன் குழுவில் முதல் இடத்தில உள்ளது. மேலும் இந்திய அணி தனது அடுத்த போட்டியில் பெல்ஜியத்தை ஆகஸ்ட் 1 ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது