காய்ச்சலுக்கு மருந்தான பாராசிட்டமால் விற்பனையை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தில் Paracetamol மாத்திரைகளை அதிகம் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அம்மாத்திரையின் விற்பனையை வரைமுறைப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இத்தீவிர நடவடிக்கையின் மூலம் அடுத்த 2.5 ஆண்டுகளில் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும், தற்கொலையைத் தடுக்கும் தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு தகவல் தெரிவித்துள்ளது.