பான்-ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேதிக்குள் 2 ஆவணங்களும் இணைக்கப்படாவிட்டால், ஜூலை 1ம் தேதி பான் கார்டு முடக்கப்படும். இதனிடையில் பான்-ஆதார் இணைப்பு தொடர்பாக ஒரு புது அப்டேட் வந்துள்ளது. பான் மற்றும் ஆதார் இணைப்பதற்குரிய படிவத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

பான் எண்ணை ஆதார் உடன் இணைக்கையில் மதிப்பீட்டு வருடம்(AY) எனும் விருப்பமானது இருக்கிறது. வருமான வரித்துறை இப்போது மதிப்பீட்டு ஆண்டை புதுப்பித்து உள்ளது. தாமத கட்டணத்தை செலுத்த 2024-25 மதிப்பீட்டு ஆண்டை தேர்ந்தெடுக்க வேண்டும். முன்பாக காலக்கெடு 31 மார்ச் 2023 ஆக இருந்தது. எனவே முன்னர் 2023-24 மதிப்பீட்டு ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.