ஜப்பான் டோக்கியோவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாத் டப்பில் தலையில்லாமல் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணையில் ஒரு சைக்கோ குடும்பத்தால் அந்த நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.62 வயது நபர் ஒருவர் பெண்ணோடு வந்திருக்கிறார். அவர்கள் இருவரும் அங்கு உணவு அருந்தி விட்டு ஹோட்டல் அறைக்குள் சென்றுள்ளார்கள். பிறகு 8 மணி அளவில் கருப்பு அங்கி  போன்ற உடையவோடு 3 பேர் அங்கிருந்து சென்றனர். ஹிட்டோஷி உரா தவிர மற்ற மூன்று பேரும் அந்த ஹோட்டலில் இருந்து வெளியேறியுள்ளார்கள்.

இந்த நிலையில் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாத்ரூம் குளியல் தொட்டியில் ஒரு தலை இல்லாத முண்டம் இருந்துள்ளது. இதை பார்த்து  அலறி அடித்துக்கொண்டு  வந்தார்கள். மேஜையில் அவருடைய தலை இருப்பதை பார்த்து பயந்து போய் வெளியே ஓடி சென்றுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் ஹிடோஷியோடு வந்த ரூனா தாமுரா என்ற பெண்ணையும் ஹிடோசியை கொலை செய்ய உடந்தையாக இருந்த அவருடைய தந்தை மற்றும்  தாயாரையும் கைது செய்துள்ளனர்.