மக்களவைத் தேர்தல் பரபரப்பு தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்த்த நிலையில் பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக அடுத்த கட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்டியுள்ளது. குறிப்பாக தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க நினைக்கும் அதிமுக அந்த கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கவும் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.