மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி ஏற்கனவே தொகுதி பங்கீட்டை முடித்து விட்டது. ஆனால் அதிமுக நிலை என்னவென்று தெரியாமல் தொண்டர்கள் குழம்பி வருகிறார்கள். புதிய தமிழகம் போன்ற சிறு கட்சிகள் அதிமுகவில் இணைந்துள்ள நிலையில் தேமுதிக இணையுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இதனால் இந்த தேர்தலில் அதிமுக தனித்துவிடப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.