மோடி கலந்து கொண்ட சாலை பேரணியை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவையில் நேற்று வாகன பேரணியில் கலந்து கொண்டார். சுமார் 2.5 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த வாகன பேரணி நடந்தது. இதில் பெரிய அளவுக்கு கூட்டம் இல்லை என்று சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறது. இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், கூட்டம் இல்லாமல் பிரதமர் ரோடு ஷோ நடத்தியதாக விமர்சித்துள்ளார்.