மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜியின் ஹெலிகாப்டரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது பெரும் சலசலப்புகளை உருவாக்கியது. இதுகுறித்து கூச் பெஹார் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி பேசியதாவது, “வருமான வரித் துறை அதிகாரிகள் அபிஷேக் பானர்ஜியின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்துகின்றனர்.

இதுபோன்ற செயல்களின் பின்னணியாக பாஜக செயல்படுகிறது. ஆனால், பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களில் சோதனை செய்ய தேர்தல் ஆணைய அதிகாரிகள் துணிவார்களா? என கேள்வியெழுப்பியுள்ளார்.