இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் பாஜக நேரடியாக 19 தொகுதிகளில் களம் காண்கிறது. ஐஜேகே, புதிய நீதி கட்சி, தமமுக, இந்திய மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுக உரிமை மீட்பு குழு ஆகிய கட்சிகள் தாமரை சின்னத்தில் தலா ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளன. பாமக 10 தொகுதிகள், தமாகா மூன்று தொகுதிகள், அமமுக 2 தொகுதிகள் என பிரித்தளிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று கட்சிகள் அவரவர் சொந்த சின்னத்தில் தேர்தலை சந்திக்க உள்ளன.