ஆ. ராசாவின் கார் நேற்று பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பாஜகவினர் அவரை காரில் பார்த்துவிட்டு பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து உடனே ஆ.ராசா காரை நிறுத்த சொல்லி கண்ணாடியை திறந்து, தமிழ்நாடு வாழட்டும் பாரதம் வாழட்டும் என்று கூறிச் சென்றார். உடனே அங்கிருந்த பாஜக நிர்வாகி ஒருவர், நீங்க பேசும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனால் உங்களின் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறி பாராட்டினார்.