2024 டி20 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. தொடக்கப் போட்டிக்கான நிகழ்ச்சி மற்றும் CSK vs RCB அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இன்று நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆரம்ப கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் கண் கவரும் வகையில் இருக்கும் என்பதால் அதிக அளவிலான ரசிகர்கள் நிகழ்ச்சியை காண வருவார்கள்.

அதிலும் குறிப்பாக கிரிக்கெட் போட்டி இரவு 11 மணிக்கு மேல் தான் முடியும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்களின் நலனை கருதி இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை ஒரு மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.