கடந்த 2020ல் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் பிகார் முதலமைச்சரானார். இதனையடுத்து கடந்த 2022ல் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி ஆர்ஜேடியுடன் இணைந்து புதிதாக ஆட்சி அமைத்தார் நிதிஷ் குமார். இந்நிலையில் மீண்டும் பாஜகவோடு இணைந்துள்ளார்.

தற்போது பாரதிய ஜனதா கட்சியுடன் எனது வாழ்நாளில் மீண்டும் கூட்டணி வைக்கமாட்டேன். மேலும் சாகும் வரை இனி பாஜகவுடன் கைகோர்க்க மாட்டேன். பாஜகவுடன் கூட்டணி சேர்வதை விட உயிரை விடுவதே மேல் என அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.