தமிழகத்தில் பாஜகவுடன் தோழமை போட்டு ஆட்சியில் இருந்து கோடி கோடியாக திமுக கொள்ளை அடித்ததை மக்கள் மறந்துவிடவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவை தங்கள் பகையாளி என்று சொல்லும் திமுக நாளைய அரசியல் லாபம் என்றால் பங்காளி என்று அழைப்பார்கள்.

அதே நேரத்தில் பாஜகவின் சித்தாந்தம், கொள்கை வேறு அதிமுகவின் சித்தாந்தம் கொள்கை வேறு. பாஜகவுடன் தோழமை போட்டு ஆட்சியில் இருந்த காலத்தில் திமுக கோடி கோடியாக கொள்ளை அடித்ததை மக்கள் இன்றும் மறந்துவிடவில்லை என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.