நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஜகவுக்கு போடக்கூடிய ஓட்டு தமிழ்நாட்டுக்கு வைக்கக்கூடிய வேட்டு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், தமிழ்நாட்டுக்கு எதிராக தமிழக மக்களின் நலனுக்காக விரோதமாக செயல்படும் பிரதமர் மோடி வாக்கு கேட்டு தமிழகம் வருகிறார். அவர் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வர வேண்டும், மக்களின் கோப உணர்வு அப்போதுதான் அணையாமல் இருக்கும். அது பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி எறியும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.