ஐபிஎல் 2026 தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (CSK vs PBKS) இடையிலான மோதல், ஒரு மைதானத்திற்குள் நடக்கும் கிரிக்கெட் போட்டியாக மட்டுமல்லாமல், ஒரு குடும்பத்தின் பாசப் போராட்டமாகவும் மாறியுள்ளது.
சிஎஸ்கே அணியில் இடம்பிடித்துள்ள நட்சத்திர வீரர் சர்பராஸ் கான் மற்றும் பஞ்சாப் அணியின் இளம் புயல் முஷீர் கான் ஆகிய இரு சகோதரர்களும் முதல்முறையாக ஐபிஎல் களத்தில் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் காண வந்த இவர்களது தந்தையும் பயிற்சியாளருமான நௌஷாத் கான், தனது இரு மகன்களுக்கும் சமமான ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், ஒரு பாதியில் மஞ்சள் நிற சிஎஸ்கே ஜெர்சியும், தலையில் சிவப்பு நிற பஞ்சாப் கிங்ஸ் தொப்பியும் அணிந்து வந்த புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
Sarfaraz & Musheer’s father wearing CSK Jersey & PBKS Cap 😄❤️
– The battle of brothers tonight. pic.twitter.com/vfEJESWFsc
— Johns. (@CricCrazyJohns) April 3, 2026
“>
தோனியின் காயத்திற்குப் பிறகு சிஎஸ்கே-வின் மிடில் ஆர்டரை வலுப்படுத்த சர்பராஸ் கானும், ரஞ்சி கோப்பையில் இரட்டைச் சதம் அடித்து அசத்திய முஷீர் கானும் எதிரெதிர் முனையில் நிற்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைதானத்திற்கு வெளியே தனது இரு மகன்களும் தன்னை விளையாட்டுத்தனமாக இழுக்கும் அந்த நெகிழ்ச்சியான தருணத்தை நௌஷாத் கான் ரசிப்பது, “கான் சகோதரர்களின் போர்” என்பதைத் தாண்டி ஒரு தந்தையின் பெருமிதத்தை அழகாகச் சித்தரிக்கிறது.
When your biggest supporter is in the stands! ❤️ pic.twitter.com/XtJUZLNh7h
— Punjab Kings (@PunjabKingsIPL) April 3, 2026
“>
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தனது சொந்த மண்ணில் வெற்றியைத் தக்கவைக்கப் போராடும் அதே வேளையில், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியின் முஷீர் கான் அண்ணனுக்குச் சவால் கொடுப்பாரா என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
