பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் மற்றும் பிண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 10-வது லீக் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 198 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டி அபார வெற்றி பெற்றது.
கேப்டன் டேவிட் வார்னர் (50) மற்றும் அசாம் கான் (74) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி வெற்றிக்கனியை எட்டியது. ஆனால், போட்டி முடிந்த பிறகு டேவிட் வார்னர் தனது அணி வீரர் மொயீன் அலியிடம் மிகவும் கோபமாகப் பேசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
What was the conversation going on here @HaiderAzhar 😅,
Good win Alhamdu Lillah, No one can stop us this Season in Sha Allah👌 pic.twitter.com/oRhNBPubws
— SheR•ALI (@Sher__Ali) April 2, 2026
இந்த வீடியோ குறித்து எக்ஸ் (X) தளத்தில் விளக்கம் அளித்துள்ள டேவிட் வார்னர், “நாங்கள் இருவரும் சண்டையிடவில்லை. நான் ஹைதர் அசாரை முதலில் சென்று கைகுலுக்குமாறு (Handshake) கூறினேன். அவ்வளவுதான், எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர்கள் இருவரும் விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்ததைச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு வீடியோவாகப் பகிர்ந்துள்ளனர் என்று அணி நிர்வாகம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிக் கொண்டாட்டத்தின் போது இது போன்ற சிறு சிறு விவாதங்கள் சகஜம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
